'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி | அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு | தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் | தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! | நளினியுடன் இணைந்தது உண்மையா? நடிகர் ராமராஜன் விளக்கம் | குட் பேட் அக்லி - அனைத்து 'அக்லி' வார்த்தைகளையும் 'கட்' செய்த சென்சார் | ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை |
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது நாயகன் என அழைக்கப்படும் ரஹ்மான் உலக அளவிலும் புகழ் பெற்றவராக இருக்கிறார். தன்னுடைய குடும்பப் புகைப்படங்களை அவ்வளவாக சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டதில்லை. எப்போதவாது மகனுடன் இருக்கும் புகைப்படங்களையும், மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுவார். மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிடுவது அபூர்வம்.
இன்று தன்னுடைய 27வது திருமண நாளை முன்னிட்டு மனைவி சாய்ரா பானுவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒன்றாக இருப்பது ஒரு கலை…எல்லாப் புகழும் இறைவனுக்கே,” என்று பதிவிட்டுளளார். அவர்களுக்கு ரசிகர்கள் பலரும் மணநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஏஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் 'பொன்னியின் செல்வன், இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு, மாமன்னன்' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.