தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அருண் ராஜா காமராஜ் முதலில் நடிகராக ராஜா ராணி, மான் கராத்தே மூலம் மக்களிடையே பிரபலமானார். இது அல்லாமல் அவர் 'நெருப்பு டா', 'வரலாம் வரலாம் வா', 'கொடி பறக்குதா', செம வெயிட்டு' உள்ளிட்ட பல பாடல்களை எழுதி, பாடினார். அதன் பின்னர் 'கனா', 'நெஞ்சுக்கு நீதி', 'லேபிள் வெப் தொடர்' போன்ற படைப்புகளை ஒரு இயக்குனராக தந்தார்.
கடந்தாண்டு வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பிற்கு பிறகு இந்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
தற்போது விஷ்ணு விஷால் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது "அருண் ராஜ காமராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் ஒரு வித்தியாசமான விளையாட்டு படம். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் அல்லது ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்கும்" என்றார்.
இதன் மூலம் கனா படத்திற்கு பிறகு மீண்டும் அருண் ராஜ காமராஜ் ஸ்போர்ட்ஸ் கதைக்களம் கொண்ட படத்தை கையில் எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.