சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை மூன்று முறை பெற்றவர் கமல்ஹாசன். அவருக்கு அடுத்து இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்றவர் தனுஷ்.
'ஆடுகளம், அசுரன்' ஆகிய படங்களின் மூலம் தனுஷின் இமேஜ் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோரை விடவும் அதிகமாக உயர்ந்தது. நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, தயாரிப்பு என தன்னை பல விதங்களில் சினிமாவில் ஈடுபடுத்திக் கொள்பவர்.
ஆனால், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த இரண்டு தமிழ்ப் படங்களும், ஒரு ஹிந்திப் படமும் ஓடிடி வெளியீடுகள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் ஓடிடியில் வெளிவந்த 'ஜகமே தந்திரம்', கார்த்திக் நரேன் இயக்கத்தில் நேற்று வெளியான 'மாறன்' ஆகிய இரண்டு படங்களையும் தனுஷ் எப்படி தேர்வு செய்து நடித்தார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தனுஷைப் பொறுத்தவரையில் இயக்குனர்களின் நடிகர் என்று பெயர் வாங்கியவர். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள், கடந்த வருடம் வெளிவந்த 'கர்ணன்' உள்ளிட்ட படங்கள் அதற்கு சாட்சி. இரண்டு கார்த்திக்குகளை நம்பி தன்னுடைய இமேஜை தனுஷ் கெடுத்துக் கொண்டார் என்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
கதை தேர்வு, கதாபாத்திரத் தேர்வு ஆகியவற்றுடன் இயக்குனர்கள் பற்றிய தெளிவும் ஒரு நடிகருக்குத் தேவை என்பதை மீண்டும் புரிய வைத்திருக்கிறார் தனுஷ் என்று திரையுலகத்திலும் கிசுகிசுக்கிறார்கள். எத்தனையோ நல்ல கதைகளுடன் கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் அனுபவம் வாய்ந்த இளம் இயக்குனர்களின் கதைகளை இனிமேலாவது தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் கேட்கட்டும் என்ற குரல் கேட்க ஆரம்பித்துவிட்டது.