ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 என்ற படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி, அதன் பிறகு கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்த வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்க உள்ள ஐஸ்வர்யா, அடுத்தபடியாக படங்கள் இயக்குவதற்காக தயாராகி வருகிறார். அந்த வகையில், அவர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கப் போவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சிம்புவும், தனுஷும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டவர்கள். இப்படியான நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு சிம்புவை வைத்து தனது முதல் படத்தை ஐஸ்வர்யா இயக்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி கோலிவுட்டில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.