மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளில் இதுவரை 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது துபாயில் நடந்து வரும் பிரபலமான 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜா இசை கச்சேரி நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த இசை கச்சேரி நேற்றிரவு (மார்ச் 5) கோலகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. துபாய் எக்ஸ்போ ஷோவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்துடன் இசை கச்சேரி நடைபெற்றது. கொரோனா 2வது அலைக்கு பிறகு மக்கள் பெருமளவு கூடி நிகழ்ச்சியை ரசித்தனர். இதேபோன்ற நிகழ்ச்சி சென்னையிலும் நடத்த வேண்டும் என இளையராஜா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.