டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

டிவியில் கடந்த ஐந்து சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சி, 'பிக் பாஸ் அல்டிமேட்' என்ற பெயரில் ஓடிடி தளத்தில் முதல் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. டிவியில் மட்டுமல்லாது ஓடிடி தளத்திலும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால், பிப்ரவரி 20ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியோடு தொகுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவருக்குப் பதிலாக யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என ஒரு கேள்வி இருந்தது. டிவியில் ஒளிபரப்பான போது கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கமல்ஹாசன் ஒரு வாரம் மட்டுமே விலகியிருந்தார். அப்போது அவருக்குப் பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதனால், அவரே இப்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், தற்போது நடிகர் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது. ஓடிடி தளத்தில் நிகழ்ச்சிக்குப் பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இன்னும் நான்கைந்து வாரங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். எனவே, சிம்புவுக்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாகக் கொடுக்கவும் நிகழ்ச்சிக் குழுவினர் தயாராக இருக்கிறார்களாம். அதற்கு சிம்புவும் சம்மதித்துவிட்டதாகத் தகவல். இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வரலாம்.
டிவியில் ஒளிபரப்பான 5வது சீசனுக்கு முந்தைய சீசன்களைப் போல அதிக வரவேற்பில்லை. கமல்ஹாசன் அரசியலில் இறங்கிய பிறகு கட்சி சார்புள்ள ரசிகர்கள் நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள். அதனால், அடுத்த ஆறாவது சீசனை சிம்புவே தொகுத்து வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




