புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். பலரும் தங்களது தகவல்களை ரசிகர்களுக்கு இவற்றின் மூலம்தான் தெரியப்படுத்துகின்றனர். அதேசமயம் சில விஷமிகள் இது போன்ற நட்சத்திரங்களின் கணக்குகளை ஹேக் செய்து அதில் விஷமத்தனமான செய்திகளை பரப்பி அவர்களை சங்கடத்திலும் சிலநேரம் சிக்கலிலும் சிக்க வைக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் ஒரு வழியாக தான் அதை மீட்டு விட்டதாகவும் அதில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்குமாறும் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நடிகை காயத்ரி. இதுகுறித்து காயத்ரி கூறுகையில், துல்கர்சல்மான் போலவே ஏதாவது மெசேஜ் வந்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த பதிவுக்கு பதிலளித்துள்ள நடிகர் பிரேம்ஜி அவரிடமிருந்து தனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும் அதை கிளிக் செய்தபோது வேறு ஏதோ ஒரு வலைதள பக்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.