ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். பலரும் தங்களது தகவல்களை ரசிகர்களுக்கு இவற்றின் மூலம்தான் தெரியப்படுத்துகின்றனர். அதேசமயம் சில விஷமிகள் இது போன்ற நட்சத்திரங்களின் கணக்குகளை ஹேக் செய்து அதில் விஷமத்தனமான செய்திகளை பரப்பி அவர்களை சங்கடத்திலும் சிலநேரம் சிக்கலிலும் சிக்க வைக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் ஒரு வழியாக தான் அதை மீட்டு விட்டதாகவும் அதில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்குமாறும் தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நடிகை காயத்ரி. இதுகுறித்து காயத்ரி கூறுகையில், துல்கர்சல்மான் போலவே ஏதாவது மெசேஜ் வந்திருந்தால் அதை கண்டுகொள்ளாமல் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த பதிவுக்கு பதிலளித்துள்ள நடிகர் பிரேம்ஜி அவரிடமிருந்து தனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும் அதை கிளிக் செய்தபோது வேறு ஏதோ ஒரு வலைதள பக்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.




