டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது |
கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிரேமம். அந்த படத்தில் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் மலர் டீச்சர் கதாபாத்திரமும் அதில் நடித்த சாய்பல்லவியும் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆனார்கள். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை தெலுங்கில் நாகசைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரீமேக் செய்தனர்.
அந்த சமயத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதிஹாசனை சோசியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்தனர் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான தேர்வு அல்ல என்பது தான் பலரின் கருத்தாக இருந்தது. இருந்தாலும் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்த படத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன்.
படம் வெளியாகி சில வருடங்கள் ஆனா நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பிரேமம் படத்தில் நடித்தது குறித்து ஸ்ருதிஹாசன் மனம் திறந்துள்ளார். அவர் கூறும்போது, “பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்க கூடாது.. அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்துப்போய் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. ஆனால் நான் முதன் முறையாக இவ்வளவு கிண்டலுக்கு ஆளானது இந்த கதாபாத்திரத்திற்காக தான்.. இருந்தாலும் எனது வேலையை நான் சரியாகவே செய்தேன் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்