பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிரேமம். அந்த படத்தில் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் மலர் டீச்சர் கதாபாத்திரமும் அதில் நடித்த சாய்பல்லவியும் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆனார்கள். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை தெலுங்கில் நாகசைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரீமேக் செய்தனர்.
அந்த சமயத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதிஹாசனை சோசியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்தனர் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான தேர்வு அல்ல என்பது தான் பலரின் கருத்தாக இருந்தது. இருந்தாலும் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்த படத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன்.
படம் வெளியாகி சில வருடங்கள் ஆனா நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பிரேமம் படத்தில் நடித்தது குறித்து ஸ்ருதிஹாசன் மனம் திறந்துள்ளார். அவர் கூறும்போது, “பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்க கூடாது.. அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்துப்போய் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. ஆனால் நான் முதன் முறையாக இவ்வளவு கிண்டலுக்கு ஆளானது இந்த கதாபாத்திரத்திற்காக தான்.. இருந்தாலும் எனது வேலையை நான் சரியாகவே செய்தேன் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்