பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிரேமம். அந்த படத்தில் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் மலர் டீச்சர் கதாபாத்திரமும் அதில் நடித்த சாய்பல்லவியும் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆனார்கள். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை தெலுங்கில் நாகசைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரீமேக் செய்தனர்.
அந்த சமயத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதிஹாசனை சோசியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்தனர் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான தேர்வு அல்ல என்பது தான் பலரின் கருத்தாக இருந்தது. இருந்தாலும் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்த படத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன்.
படம் வெளியாகி சில வருடங்கள் ஆனா நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பிரேமம் படத்தில் நடித்தது குறித்து ஸ்ருதிஹாசன் மனம் திறந்துள்ளார். அவர் கூறும்போது, “பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்க கூடாது.. அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்துப்போய் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. ஆனால் நான் முதன் முறையாக இவ்வளவு கிண்டலுக்கு ஆளானது இந்த கதாபாத்திரத்திற்காக தான்.. இருந்தாலும் எனது வேலையை நான் சரியாகவே செய்தேன் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்