லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் பிரேமம். அந்த படத்தில் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் மலர் டீச்சர் கதாபாத்திரமும் அதில் நடித்த சாய்பல்லவியும் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலம் ஆனார்கள். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதனை தெலுங்கில் நாகசைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ரீமேக் செய்தனர்.
அந்த சமயத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதிஹாசனை சோசியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்தனர் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான தேர்வு அல்ல என்பது தான் பலரின் கருத்தாக இருந்தது. இருந்தாலும் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்த படத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன்.
படம் வெளியாகி சில வருடங்கள் ஆனா நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், பிரேமம் படத்தில் நடித்தது குறித்து ஸ்ருதிஹாசன் மனம் திறந்துள்ளார். அவர் கூறும்போது, “பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்க கூடாது.. அந்த சமயத்தில் அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பிடித்துப்போய் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. ஆனால் நான் முதன் முறையாக இவ்வளவு கிண்டலுக்கு ஆளானது இந்த கதாபாத்திரத்திற்காக தான்.. இருந்தாலும் எனது வேலையை நான் சரியாகவே செய்தேன் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்