தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இது மலையாளத்தில் இவர் நடிக்கும் இரண்டாவது படம். இந்த படத்தில் ஆர்டிஓ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் மோகன்லால் மற்றும் உடன் நடித்த நடிகர்கள் சித்திக், நந்து, ரக்ஷனா உள்ளிட்ட பலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதற்கு அடுத்து அவர் பதிவிட்டுள்ள செய்திதான் ஹைலைட்டான விஷயமே.
அதாவது பொதுவாக படப்பிடிப்பில் நடிக்கும் சக நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்றாலே ஷ்ரத்தா ஸ்ரீநாத் ரொம்பவே வெட்கப்படுவாராம் ஆனால் ஆராட்டு படப்பிடிப்பில் கடைசி தினத்தன்று வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்னதாக வீட்டிற்குச் சென்றால், தனது பெற்றோர் மோகன்லாலுடன் நடித்த போட்டோ எடுத்துக் கொண்டாயா என்று கேட்பார்கள் அவர்களுக்கு காட்டுவதற்கு ஆதாரம் வேண்டும் என்பதற்காகவே மோகன்லால் மற்றும் உடன் நடித்த நடிகர்கள் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.