ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பொது நிகழ்ச்சிகளில் பார்ப்பதே அரிது. அப்படிப்பட்டவர் சினிமாவில் அதிலும் ஒரு முழு பாடலை பாடி நடித்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம் தான்.. ஆனால் அவர் அப்படி ஒப்புக்கொண்டது நடிகர் மோகன்லாலின் நட்புக்காக.. ஆம்.. தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ஆராட்டு என்கிற படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவராகவே தோன்றி தான் இசையமைத்த காதலன் படத்தில் ஹிட்டான முக்காலா முக்காபுலா என்கிற முழு பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.
கதைப்படி மோகன்லால் தனது கிராமத்து மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் தனது நண்பரான ஏ.ஆர்.ரகுமான் அழைத்தால் வருவார் என்று நிரூபிப்பதற்காகவும் ஒரு மேடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார். அதில்தான் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு பாடுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. தூள் படத்தில் சிங்கம் போல என்கிற பாடலை பரவை முனியம்மா பாட, அதில் விக்ரம் எதிரிகளுடன் மோதும் சண்டைக்காட்சியை படமாக்கி இருப்பார்கள். அதேபோல இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மேடைக் கச்சேரியில் முக்காலா பாடலை பாடிக்கொண்டிருக்க, மோகன்லால் மேடையின் பின்பக்கம் எதிரிகளை அடித்து துவைத்துக் கொண்டிருப்பதாக இந்த காட்சியை படமாக்கியுள்ளனர். தமிழில் கூட முகம் காட்டாத ஏ.ஆர்.ரகுமான் மலையாள படத்தில் நடித்திருப்பது மலையாள ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.




