நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் நடிகர்கள் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, விமல், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், குஷ்பு உள்ளிட்ட வெகு சிலரே ஓட்டளித்தனர்.
தள்ளாத வயதிலும் கூட பொதுமக்கள் பலரும் காத்திருந்து ஓட்டளித்தனர். ஆனால் சினிமாவில் பிரபலமாக இருக்கும் திரைநட்சத்திரங்கள் அநேக பேர் இந்த தேர்தலில் ஓட்டளிக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இன்றைக்கு தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக இருக்கும் ரஜினிகாந்த், அஜித் குமார், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஷால், திரிஷா, ஆர்யா, வடிவேலு, ஷங்கர் உள்ளிட்ட பலரும் ஓட்டளிக்கவில்லை. பெரும்பாலும் இவர்கள் கூறும் கருத்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் வெளியூரில் இருப்பதாக சொல்கிறார்கள். சிலர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் ஓட்டளிக்கவில்லை என்கிறார்கள்.
வெளியூர்களில் வேலை பார்க்கும் பொதுமக்கள் பலரும் ஓட்டு போடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்று ஓட்டளித்துள்ளனர். சில பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து கூட ஓட்டு போட்டுள்ளனர். ஆனால் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஓட்டு போடவில்லை. திரைப்பிரபலங்கள் நினைத்தால் விமானத்தில் பறந்து வந்து ஓட்டு போட்டு செல்ல முடியும். ஆனால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
சமூகவலைதளங்களில் சினிமா நடிகைகள் தங்களது போட்டோக்களை தினம்தோறும் பதிவிட தவறுவதில்லை. குறிப்பாக கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து அதை பதிவிடுகிறார்கள். ஆனால் இன்று நடந்த தேர்தல் தொடர்பாக ஒரு சில நடிகைகள் தவிர மற்ற யாரும் தாங்கள் ஓட்டு போட்டோம் என தெரிவிக்கவில்லை.
சினிமாவில் மட்டும் தான் பக்கம் பக்கமாக ஓட்டு போடுங்க, ஜனநாயக கடமையை செய்ய தவற விடாதீங்க என ஏகத்திற்கும் வசனம் பேசுகிறார்கள் திரையுலகினர். ஆனால் நிஜத்தில் பலரும் அப்படி நடந்து கொள்வதில்லை என்பதே உண்மை.