பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
எம்.கே.என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் படம் கூர்மன். பிரையன் பி.ஜார்ஜ் இயக்கி உள்ளார். ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன், நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். டோனி பிரிட்டோ இசை அமைத்துள்ளார், சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகை ஜனனி, இயக்குனரிடம் சண்டைபோட்டு இந்த படத்தின் வாய்ப்பை பெற்றதாக கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்த படத்தின் இயக்குனர் பிரையன் ஜார்ஜை, தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் இயக்குனராகி படம் எடுக்கும்போது நான் தான் அதில் நடிப்பேன். வேறு யாரையாவது நாயகியாக போட்டால் உங்களிடம் வந்து சண்டை போடுவேன் என்றேன். நான் இதனை ஜாலியாகத் தான் அவரிடம் சொன்னேன். ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார்.
இந்தக்கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்தது எல்லாமே மேஜிக்தான். ஒரே ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும், ஆனால் அன்று நல்ல மழை, அதனால் அந்த காட்சிகள் மழையில் நடப்பதாக காட்சியை மாற்றி எடுத்தோம்.
ஒரு காட்சியை மழையில் எடுத்தால் எல்லா காட்சியையும் மழையில் எடுக்க வேண்டுமே. அதனால் மழை நின்று விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே காட்சிகளை எடுத்தோம். மேஜிக் மாதிரி கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும் என்றார்.