புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
'திரு திரு துறு துறு' படத்தில் அறிமுகமான ஜனனி அய்யரை அடையாளம் காட்டியது பாலா இயக்கிய 'அவன் இவன்'. அதன் பிறகு பல படங்களில் நடித்தவர் பின்பு மலையாளத்துக்கு சென்றார். அங்கு சில படங்களில் நடித்து விட்டு மீண்டும் தமிழுக்கு வந்தவர் அதே கண்கள், பலூன் படங்களில் நடித்தார். கடைசியாக அவர் விதி மதி உல்டா படத்தில் நடித்தார் . இந்த படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் யோகிபாபு நடித்த தர்மபிரபு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
ஜனனி நடித்துள்ள கசட தபற, தொல்லைக்காட்சி, வேஷம், பகீரா, யாக்கை திரி, முன்னரிவான் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இதில் சில படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. சில பாதியில் நிற்கிறது. இந்த நிலையில கூர்மன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறர்.
பிரையன் பி ஜார்ஜ் இயக்கும் இந்த படத்தில் ராஜாஜி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எம்.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைக்க, சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு த்ரில்லர் வகை படமாகும்.