படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜனனி (ஜனனி ஐயர்). அதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2018ல் பிக்பாஸ் சீசன்-2வில் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது ரன்னராக பரிசு பெற்றார். இந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்கிறார் ஜனனி.
ஆம் இவருக்கும் விமான பைலட்டாக பணிபுரியும் ரோஷன் சியாம் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள ஜனனி, “இப்போதும் எப்போதும்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.