இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
யூடியூப், சமூக வலைதளங்கள் வந்த பிறகு அதிக பார்வைகளைப் பெறும் டிரைலர்கள், பாடல்கள் நல்ல வசூலைப் பெறும் வரவேற்பைப் பெறும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அது போல அதிக பாலோயர்களை வைத்திருப்பவர்களிடம் பணம் கொடுத்து தங்களது படங்களை 'புரமோஷன்' செய்தால் அது மக்களைச் சென்றடையும் என்ற தவறான நம்பிக்கையும் சினிமாவில் உள்ளது.
தற்போது 'அதிக பாலோயர்கள்' வைத்திருப்பவர்களைத்தான் சினிமா புரமோஷன்களுக்கும் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் சிலர். அது பற்றிய உண்மையான தெளிவான புரிதல் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்துக் கொண்டிருக்கும் பூஜாவின் அடுத்த வெளியீடாக 'ரெட்ரோ' தமிழ்ப் படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில், “சமூக வலைதளங்களும், நிஜ வாழ்க்கையும் வெவ்வேறானவை. முகத்தைக் காட்டிக் கொள்ளாத பலரால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். நானும் மனுஷிதான். ஆனால், அது உண்மையானதல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு இன்ஸ்டாவில் 30 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் 30 மில்லியன் சினிமா டிக்கெட்டாக மாறும் என்று சொல்ல முடியாது. அதே சமயம் சில சூப்பர் ஸ்டார்கள் 5 மில்லியன் பாலோயர்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் ரசிகர்களை தியேட்டர்களுக்கு மிக அதிகமாக வரவழைக்கிறார்கள். நமது வேலை சரியாகச் செய்வது முக்கியம், அதற்கான கருத்தை மக்களிடம் இருந்து நேரடியாகப் பெறுவதே சிறப்பு,” என்று பூஜா கூறியுள்ளார்.
இந்தப் புரிதல் மற்ற சினிமா பிரபலங்களிடமும் இருந்தால் சமூக வலைதள வரம்பு மீறிய 'டிரோல்கள், விமர்சனங்கள்' ஆகியவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்.