பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

யூடியூப், சமூக வலைதளங்கள் வந்த பிறகு அதிக பார்வைகளைப் பெறும் டிரைலர்கள், பாடல்கள் நல்ல வசூலைப் பெறும் வரவேற்பைப் பெறும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அது போல அதிக பாலோயர்களை வைத்திருப்பவர்களிடம் பணம் கொடுத்து தங்களது படங்களை 'புரமோஷன்' செய்தால் அது மக்களைச் சென்றடையும் என்ற தவறான நம்பிக்கையும் சினிமாவில் உள்ளது.
தற்போது 'அதிக பாலோயர்கள்' வைத்திருப்பவர்களைத்தான் சினிமா புரமோஷன்களுக்கும் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் சிலர். அது பற்றிய உண்மையான தெளிவான புரிதல் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்துக் கொண்டிருக்கும் பூஜாவின் அடுத்த வெளியீடாக 'ரெட்ரோ' தமிழ்ப் படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில், “சமூக வலைதளங்களும், நிஜ வாழ்க்கையும் வெவ்வேறானவை. முகத்தைக் காட்டிக் கொள்ளாத பலரால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். நானும் மனுஷிதான். ஆனால், அது உண்மையானதல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு இன்ஸ்டாவில் 30 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் 30 மில்லியன் சினிமா டிக்கெட்டாக மாறும் என்று சொல்ல முடியாது. அதே சமயம் சில சூப்பர் ஸ்டார்கள் 5 மில்லியன் பாலோயர்களை மட்டுமே வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் ரசிகர்களை தியேட்டர்களுக்கு மிக அதிகமாக வரவழைக்கிறார்கள். நமது வேலை சரியாகச் செய்வது முக்கியம், அதற்கான கருத்தை மக்களிடம் இருந்து நேரடியாகப் பெறுவதே சிறப்பு,” என்று பூஜா கூறியுள்ளார்.
இந்தப் புரிதல் மற்ற சினிமா பிரபலங்களிடமும் இருந்தால் சமூக வலைதள வரம்பு மீறிய 'டிரோல்கள், விமர்சனங்கள்' ஆகியவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்.