முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் |
கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் கடத்தியதாக பாயிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இந்த நிலையில் பாயிசுக்கு பல நடிகர், நடிகைளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை அக்ஷரா ரெட்டிக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்.
இதை தொடர்ந்து நேற்று கோழிக்கோடு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அக்ஷரா ரெட்டி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தல் மற்றும் பயசுடன் உள்ள தொடர்பு பற்றி 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
நடிகை அக்ஷரா ரெட்டி, மிஸ்.ஆந்திர பிதேரசம் அழகி போட்டியில் டைட்டில் வென்றவர். பிக் பாஸ் உள்ளிட்ட ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர். விஜய் டி.வி நடத்திய வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார். பில்கேட்ஸ் என்ற கன்னட படத்திலும், தாதி என்ற தெலுங்கு படத்திலும், காசு மேல காசு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.