புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நாடு முழுவதிலும் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர். என்.ரவி முதன் முறையாக தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். அதேபோல் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ரிசர்வ் மண்டல இயக்குனர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய போது தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. ஆனால் அப்போது வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்திருக்காமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், ‛‛வடக்கத்தி காரர்கள் புதுசாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்றாலும் ஏதோ தெரியவில்லை என்று நினைக்கலாம். தமிழ் பேசும் இவர்களுக்கு தமிழ் தாயை மதிக்க தோன்றவில்லையா? தமிழகத்தின் அதிகாரப்பூர்வ பண், அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து பேசுகிறார்கள். மத்திய அரசு வேலைக்கு எந்த இழப்பும் வராது என்ற இறுமாப்பா? அரசாணையை மீறிய குற்றத்துக்கு தண்டனையோ அபராதமோ விதிக்க வேண்டும்'' என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி.