பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நாடு முழுவதிலும் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர். என்.ரவி முதன் முறையாக தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். அதேபோல் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ரிசர்வ் மண்டல இயக்குனர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய போது தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. ஆனால் அப்போது வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்திருக்காமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், ‛‛வடக்கத்தி காரர்கள் புதுசாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்றாலும் ஏதோ தெரியவில்லை என்று நினைக்கலாம். தமிழ் பேசும் இவர்களுக்கு தமிழ் தாயை மதிக்க தோன்றவில்லையா? தமிழகத்தின் அதிகாரப்பூர்வ பண், அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து பேசுகிறார்கள். மத்திய அரசு வேலைக்கு எந்த இழப்பும் வராது என்ற இறுமாப்பா? அரசாணையை மீறிய குற்றத்துக்கு தண்டனையோ அபராதமோ விதிக்க வேண்டும்'' என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி.