நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நாடு முழுவதிலும் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர். என்.ரவி முதன் முறையாக தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோல் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். அதேபோல் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது ரிசர்வ் மண்டல இயக்குனர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய போது தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. ஆனால் அப்போது வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்திருக்காமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், ‛‛வடக்கத்தி காரர்கள் புதுசாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் என்றாலும் ஏதோ தெரியவில்லை என்று நினைக்கலாம். தமிழ் பேசும் இவர்களுக்கு தமிழ் தாயை மதிக்க தோன்றவில்லையா? தமிழகத்தின் அதிகாரப்பூர்வ பண், அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து பேசுகிறார்கள். மத்திய அரசு வேலைக்கு எந்த இழப்பும் வராது என்ற இறுமாப்பா? அரசாணையை மீறிய குற்றத்துக்கு தண்டனையோ அபராதமோ விதிக்க வேண்டும்'' என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி.