வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

நாகசைதன்யா, சமந்தா ஆகியோர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேருமே தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா தற்போது ஒரு பேட்டியில் அதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நாகசைதன்யா, சமந்தா விஷயத்தில் எல்லா தந்தைகளின் போலவே நானும் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் எனது மகனோ எங்களை நினைத்து கவலைப்பட்டார். அவர்களின் இந்த உறுதியான முடிவுக்கு பிறகு எனது மகனுக்கு நாங்கள் ஆதரவாக இருந்தோம். அதோடு இந்த விவாகரத்து முழுக்க முழுக்க சமந்தாவினால் எடுக்கப்பட்டதுதான். அவர்தான் விவாகரத்துக்கு ரொம்ப ஆசைப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறார் நாகார்ஜுனா.




