இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கன்னட நடிகை ராகினி திவேதி. ஏராளமான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவி ஜோடியா நடித்தார். அதற்கு முன் அறியான் என்ற படத்தில் நடித்திருந்தார்.
கன்னட சினிமாவை உலுக்கிய போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராகினி சுமார் 4 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். கன்னட படம் ஒன்றில் நடித்து வரும் அவர் தற்போது மீண்டும் தமிழிலும் நடிக்கிறார்.
த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய கே.திருஞானம் இயக்கும் ‛ஒன் 2 ஒன்' என்ற படத்தில் சுந்தர்.சி ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி நடிக்கின்றனர். விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.