சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒரே சண்டைகோழி என்றால் அது தாமரை செல்வி தான். அன்பு என்றாலும் சரி, அடிதடி என்றாலும் சரி வெளுத்து வாங்கிவிடுவார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முந்தைய சீசன்களை போல் விறுவிறுப்பாக இல்லை என ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில், இந்த சீசனில் தாமரை மட்டுமே ஆறுதலாக இருந்தார். ஆனால், இந்த வார எவிக்ஷனில் தாமரை வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணப்பெட்டி டாஸ்க்கிலேயே தாமரை வெளியேறி இருக்க வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்து வந்தனர். பாவனி கூட 'பணம் தேவை இருந்தால் ஸ்மார்ட்டாக செயல்படுங்கள்' என சொல்லியிருந்தார். ஏனென்றால் தாமரைக்கு கடன் பிரச்னை இருப்பதாக முந்தைய எபிசோடுகளில் சொல்லியிருந்தார். இந்நிலையில் அவர் இந்தவார எவிக்ஷனில் எலிமினேட் செய்யப்படவுள்ளார்.