என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
என் ராசாவின் மனசிலே, சோலையம்மா, கரிசக்காட்டு பூவே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. இவரது மூத்த மகன் இயக்குநர் செல்வராகவன், இளையமகன் நடிகர் தனுஷ். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவன் இயக்கிய படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது அவர் தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
செல்வராகவன் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சாணிக்காயிதம் மற்றும் திரவுபதி இயக்குனர் மோகனின் அடுத்த படம் இரண்டிலும் நாயகனாக நடித்து வருகிறார். விஜய்க்கு வில்லனாக நடிப்பவர் அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் வில்லனாக நடிக்க இருக்கிறார். ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தில் ஜித்தன் ரமேஷுக்கும் முக்கிய கதாபாத்திரமாம்.