புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சொல்லாமலே, சுந்தரபுருஷன் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் லிவிங்ஸ்டன். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிப்பவர் அடுத்து சுந்தர புருஷன் படத்தின் அடுத்த பாகத்துக்கான கதை எழுதி இயக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் தான் ஹீரோ ஆன அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் ஹீரோ ஆனதே ஒரு வைராக்கியத்துல நடந்தது. நல்லா நினைவுல இருக்கு. ஒரு ரயில் பயணம். விஜயகாந்த் சார் நான் இன்னும் மூணு பேர் போயிட்டிருக்கோம். அந்த இடத்துலதான் முதன் முதலா நான் ஹீரோவா பண்ணனும்னு நினைக்கிற விருப்பம் பத்தி வாய் திறக்கேன். நான் சொன்னதும் பக்கத்துல இருந்த அந்த மூணு பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. எனக்கு அவமானமாப் போச்சு. நான் கூனிக் குறுகுறதைப் பார்த்த விஜயகாந்த் சார் கண் சிவந்திடுச்சு. அவங்களைப் பார்வையாலேயே முறைச்சவர. இந்த மாதிரியெல்லாம் நடந்துக்காதீங்கன்னு திட்டினார். அந்த நிமிஷம் எனக்குள்ள் வைராக்கியம் பிறந்தது. இவங்க முன்னாடி ஒரு படத்துலயாச்சும் நடிச்சிடணும்னு முடிவு செய்தேன். கடவுள் அருளால் அது நடக்கவும் செய்தது. என்றார்.