கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி உள்ள படம் குருதி ஆட்டம். இதில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பலமுறை இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போயிருக்கிறது.
இந்நிலையில் குருதி ஆட்டம் படத்துக்கு தடை விதிக்க கோரி ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
எங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற படத்தின் வினியோக உரிமையை, ராக் போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், 4 கோடியே 85 லட்சத்திற்கு வாங்கியது. இதில், 2 கோடியே 85 லட்சம் ரூபாய் வழங்கிய ராக்போர்ட் நிறுவனம், மீதமுள்ள 2 கோடியை வழங்கவில்லை, இந்த நிலையில் ராக் போர்ட் தயாரிப்பில் குருதி ஆட்டம் என்ற படத்தை வெளியிட உள்ளதாக பத்திரிக்கை, விளம்பரங்கள் மூலமாக தெரிய வருகிறது. எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வழங்காமல் குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தற்போது வெளியிட மாட்டோம் என தயாரிப்பு தரப்பில் இருந்து உத்தரவாதம் அளிக்கபட்டதையடுத்து, விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.