புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பசங்க 2 படத்திற்கு பிறகு மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.. பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.. ஏற்கனவே வாடா தம்பி என்கிற பாடல் வெளியான நிலையில் தற்போது உள்ளம் உருகுதய்யா என்கிற இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலில் முருகன் வேடம் அணிந்து நடித்துள்ளார் சூர்யா.
இந்த வேடத்தில் நடிக்கும்போது ரொம்பவே வெட்கப்பட்டபடி நடித்தாராம் சூர்யா. நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்பவே வெட்கப்பட்டபடி நடித்தேன் டைரக்டரே என்று பாண்டிராஜிடம் சொல்வது போல கூறியுள்ளார் சூர்யா. அவரது தந்தை சிவகுமார் சில புராண படங்களில் முருகன் வேடத்தில் நடித்து பெயர் பெற்றவர் என்பதால் அவருடன் சூர்யாவின் முருகன் கெட்டப்பை ஒப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.