மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிப்பில் வினோத் இயக்கியுள்ள படம் வலிமை. இந்த படத்தில் ஹூமா குரோஷி, கார்த்திகேயா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் அஜித் பற்றிய ஒரு ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளார் வினோத்.
அவர் கூறுகையில், ‛‛அஜித்துக்கு வலியை தாங்கக்கூடிய சக்தி அதிகமாக உள்ளது. நாமெல்லாம் சுண்டு விரலில் ஒரு சின்ன அடிபட்டால் கூட அதை அனைவரிடத்திலும் சொல்வதோடு காலை தாங்கி தாங்கி நடப்போம். ஆனால் அஜித்தை பொருத்தவரை அவருக்கு வலியைத் தாங்குவது பழகிவிட்டது. முக்கியமாக அவர் நடித்த பைக் சேஸிங் காட்சிகளை படமாக்கும்போது பைக்கில் இருந்து கீழே விழுந்து அவருக்கு அடிபட்டு விட்டது. அதனால் அவருக்கு இரண்டு நாள் ஓய்வு கொடுத்து விடலாம் என்று தயாரிப்பாளர் கூறினார். ஆனால் அவரோ அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த அடிபட்ட காயத்துடன் மறுநாள் இரவு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டார்.
பைக் சேஸிங் காட்சி என்பதால் அஜித்துக்கு மூன்று லேயர் உடைகளை அணிய வேண்டும். ஆனால் அடிபட்டு புண்ணாக இருக்கும் காலில் அது போன்ற உடை அணிவது கடினம் என்ற போதும் அந்த உடையை அணிந்து கொண்டு மீண்டும் அவர் நடிக்க தயாரானார். இப்படி தனது உடம்பில் எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த வலியை தாங்கிக் கொண்டு அஜித் நடித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது என்கிறார் எச்.வினோத்.
வலிமையும் காவல்துறை சம்பந்தப்பட்ட படம் தான். இந்தப்படத்தில் இன்றைய குடும்பங்களும் இளைய சமுதாயத்தினரும் ஒரு அழுத்தத்திற்கு இருக்கிறார்கள். அது என்ன காரணம் என்பது குறித்து தான் இந்த படம் பேசுகிறது என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் வினோத்.




