முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் |
பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் அழுத்தமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனால் மலையாள திரையுலகில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து பிசியான நடிகையாக மாறினார். அதேநேரம் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தனுஷ் உடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே படங்களில் நடித்தார்.
தமிழை விட தெலுங்கு சினிமா பக்கம் சென்ற சாய் பல்லவி, பிசியான நடிகையாக மாறிவிட்டார். அவர் நடிப்பில் ராணாவுடன் 'விராட பருவம்', நாக சைத்தன்யாவுடன் 'லவ் ஸ்டோரி' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. தற்போது பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சாய் பல்லவி நடிப்புக்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் சாய் பல்லவி தனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் வந்தால் பாலிவுட் படங்களில் கூட நடக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். "பாலிவுட் படங்களில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் திரைக்கதை மிகவும் முக்கியமானது. நான் உடனே சென்று பாலிவுட்டில் அறிமுகம் ஆகிவிட முடியாது. எனக்கு கதையும் கதாபாத்திரமும் தேவை" என்று தெரிவித்துள்ளார்.