ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னையில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து இந்த விழாவை நடத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசு நிதி உதவி செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக எளிய முறையில் நடந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு 19வது சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 30 ம் தேதி துவங்கி, 2022 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. காலை 9.30 மணி துவங்கி, இரவு 9.30 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.
சத்யம் சினிமாஸ் , பிவிஆர் , எஸ்டிசி அண்ணா சினிமாஸ் ஆகிய தியேட்டர்களில் இந்த திரைப்பட விழா நடக்கிறது. 60 நாடுகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் சிறந்த படம், இரண்டாவதாக சிறந்த படம், ஸ்பெஷல் ஜுரி விருது ஆகியவற்றுக்கான போட்டிகள் தனியாக நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் ஐந்து உணர்வுகள், பூமிகா, கர்ணன், கட்டில், கயமை கடக்க, மாறா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், சேத்துமான், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், தேன், உடன்பிறப்பே படங்கள் ஆகியவை கலந்து கொள்கின்றன.