இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் ‛அண்ணாத்த'. இமான் இசையமைத்து இருந்தார். இப்படம் அதிக விமர்சனங்களை சந்தித்தபோது உலகளவில் ரூ.200 கோடி வசூலை எட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படம் 50 நாட்களை கடந்துள்ளது.
இதுதொடர்பாக ரஜினி வெளியிட்ட ஆடியோ சுருக்கம் : ‛‛கொரோனா உள்ளிட்ட பல தடைகளை கடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறைய சிரமங்களுக்கு இடையே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. படம் வெளியானதும் மழை வந்து குறுக்கிட்டது. எதிர் விமர்சனங்களும் அதிகம் வந்தன. எதிர் விமர்சனம் மற்றும் மழை ஆகியவற்றை கடந்து 'அண்ணாத்த' படம் வெற்றி அடைந்துள்ளது. மழை இல்லை என்றால் இந்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும். இதெல்லாம் பார்க்கும் போது பாட்ஷா படத்துக்கு நான் பேசிய டயலாக் தான் நினைவுக்கு வருது. ‛‛ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான். ஆனால் கெட்டவங்கள...'' என்று கூறி சிரித்தபடி முடித்திருக்கிறார்.
![]() |