பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தற்போது 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இதனிடையே, சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பரவியது. லேசான இருமலுக்காக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொண்டார் சமந்தா. அதை வைத்து வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். அதன்பின் சமந்தாவின் மானேஜர் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என விளக்கம் கொடுத்தார்.
நேற்று இரவு சமந்தா ஒரு செல்பி புகைப்படத்தைப் பதிவிட்டு, “நாள் முழுவதும் தூங்கினேன், இப்போது இரவு 9 மணிக்குதான் எழுந்தேன்” எனப் பதிவிட்டு தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தொடர்ந்து சமூகவலைதளத்தில் சில பதிவுகளையும் பதிவிட்டுள்ளார்.