ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
திரைத் துறையில் நடிப்பு மற்றும் தயாரிப்பில் பயணித்து வந்த நடிகை நயன்தாரா, தற்போது அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட துவங்கி உள்ளார். இதற்காக அவர், 'தி லிப் பாம்' நிறுவனத்துடன் இணைந்து உள்ளார்.
இது குறித்து, நயன்தாரா தரப்பு அறிக்கை: தோல் மருத்துவர் ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து, அழகு சாதன பொருட்கள் உலகில், புதிய பிராண்டை அறிமுகம் செய்வதன் வாயிலாக, புதிய அத்தியாயத்தை நயன்தாரா துவக்கி உள்ளார். தான் பயன்படுத்தும் சொந்த சரும பராமரிப்பு பொருட்களின், சிறப்பான செயல்திறன், உயர்பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில், இந்நிறுவனத்துடன் அவர் கைகோர்த்து உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன், கீர்த்தி சுரேஷ் இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும்; சமந்தா, காஜல் உள்ளிட்டோர் ஓட்டல், ஜவுளி உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்து உள்ளார்.