டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்காக, யுவன்சங்கர் ராஜா இசையில் 'நான் பார்த்த முதல் முகம் நீ' என தொடங்கும் பாடலை .விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தாயின் பெருமையை சொல்லும் விதமாக சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப்பாடல் நேற்றுமுன்தினம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்த நிலையில் பாடலை எழுதிய விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த நெகிழ்சியான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் “ இந்த பாடலை ஓய்வுப்பெற்ற இன்ஸ்பெக்டர் மீனாகுமாரிக்கு ... என் அம்மாவுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.. என்னுடைய அம்மாவுக்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்ற விருப்பம் எப்போதுமே எனக்கு இருந்தது. இதன்மூலமாக நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்“ என கூறியுள்ளார்
இந்த பதிவு மூலமாக இரண்டு ஆச்சர்யமான விஷயங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நாயகனின் அம்மாவும் போலீஸ் அதிகாரி தான். அதில் நடித்த ராதிகாவின் பெயரும் கூட மீனாகுமாரி தான். அந்தவகையில் தனது தாயின் பெயரையும் அவர் வகித்த பதவியையும் தான் அந்தப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் விக்னேஷ் சிவன். அதேசமயம், கதைப்படி மீனாகுமாரி என்கிற தனது தாயின் பெயருள்ள அந்த கதாபாத்திரத்தின் மருமகளாக நயன்தாரா வரவேண்டும் என கதை எழுதும்போதே எப்படி தீர்மானித்து இருப்பார் என்பது தான் ஆச்சர்யம் தருகிறது. இவர்கள் காதல், திருமணத்தில் இணையும்போது, அவர் எழுதிய கதையும் நிஜமாகி விடும் அல்லவா?




