இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்காக, யுவன்சங்கர் ராஜா இசையில் 'நான் பார்த்த முதல் முகம் நீ' என தொடங்கும் பாடலை .விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தாயின் பெருமையை சொல்லும் விதமாக சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்தப்பாடல் நேற்றுமுன்தினம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்த நிலையில் பாடலை எழுதிய விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த நெகிழ்சியான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் “ இந்த பாடலை ஓய்வுப்பெற்ற இன்ஸ்பெக்டர் மீனாகுமாரிக்கு ... என் அம்மாவுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.. என்னுடைய அம்மாவுக்காக ஒரு பாடல் எழுத வேண்டும் என்ற விருப்பம் எப்போதுமே எனக்கு இருந்தது. இதன்மூலமாக நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்“ என கூறியுள்ளார்
இந்த பதிவு மூலமாக இரண்டு ஆச்சர்யமான விஷயங்கள் வெளியே தெரிய வந்துள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நாயகனின் அம்மாவும் போலீஸ் அதிகாரி தான். அதில் நடித்த ராதிகாவின் பெயரும் கூட மீனாகுமாரி தான். அந்தவகையில் தனது தாயின் பெயரையும் அவர் வகித்த பதவியையும் தான் அந்தப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் விக்னேஷ் சிவன். அதேசமயம், கதைப்படி மீனாகுமாரி என்கிற தனது தாயின் பெயருள்ள அந்த கதாபாத்திரத்தின் மருமகளாக நயன்தாரா வரவேண்டும் என கதை எழுதும்போதே எப்படி தீர்மானித்து இருப்பார் என்பது தான் ஆச்சர்யம் தருகிறது. இவர்கள் காதல், திருமணத்தில் இணையும்போது, அவர் எழுதிய கதையும் நிஜமாகி விடும் அல்லவா?