ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அஷ்வின். நிகழ்ச்சியில் அவரை அதிகம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக கோமாளியாக இருந்த ஷிவாங்கி நிறைய சுவாரசியமான விஷயங்களைச் செய்தார். அவைதான் அஷ்வின் மீதான ரசிகர்களின் கவனிப்பு அதிகம் வரக் காரணமாக இருந்தது. ஆனால், அவை தன்னால்தான் அதிகம் ஏற்பட்டதாக அஷ்வின் தப்புக் கணக்கு போட்டிருப்பார் போலிருக்கிறது.
அஷ்வின் கதாநாயகனாக நடிக்கும் 'என்ன சொல்லப் போகிறாய்' படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அஷ்வின், “என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். இதுவரை 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை 'என்ன சொல்ல போகிறாய்' மட்டும்தான்,” என்று பேசினார்.
தன்னிடம் கதை சொன்ன அந்த 40 பேரைக் கிண்டலடிக்கும் விதத்தில், அஷ்வினின் இந்தப் பேச்சு உதவி இயக்குனர்களிடமும், இயக்குனர்களிடமும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. சில இயக்குனர்கள் அஷ்வினைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் உள்ளனர்.
அஷ்வின் நடித்து இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் இந்த அளவிற்கு திமிராகப் பேசுவதா என திரையுலகத்திலும் பலர் அவரைத் திட்டி வருவதாகவும் தகவல்.
தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அஷ்வின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.