ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள இளம் பாடகர்களில் ரசிகர்களின் பெரும் அபிமானத்தைப் பெற்றவராக சித் ஸ்ரீராம் இருக்கிறார். 'விஸ்வாசம்' படத்தில் 'கண்ணான கண்ணே' பாடலைப் பாடிய பிறகு அவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அவரை அந்தப் பாடல் அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது.
தற்போது அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தில் ஒரு அற்புதமான அம்மா பாடலைப் பாடியிருக்கிறார். யுவனின் இசையில், விக்னேஷ் சிவன் எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ள 'நான் பார்த்த முதல் முகம் நீ…' என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. முதல் முறை கேட்கும் போதே பாடல் ரசிக்க வைக்கிறது என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அம்மாவின் பாசம், நேசம் என அனைத்தையும் பாடலில் கொண்டு வந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். யுவனின் மென்மையான இசை அப்படியே நம்மைத் தாலாட்டுகிறது.
இப்பாடலைப் பற்றி பாடகர் சித் ஸ்ரீராம், “சாதனையாளர் அஜித்தின் 'வலிமை' படத்தில் இந்தப் பாடலைப் பாடியது பெருமைக்குரியது. சகோதரர் விக்னேஷ் சிவனின் உறைக்க வைக்கும் வரிகளை, சகோதரர், ஒப்பற்றவர் யுவனின் இசையில் பாடும் அனுபவம் எப்போதும் வியக்க வைக்கும். அனைத்து அம்மாக்களுக்கம் இந்தப் பாடல் காணிக்கை,” என்று தெரிவித்துள்ளார்.




