ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'மாநாடு'. டைம் லூப் அடிப்படையில் கதை கொண்ட இப்படத்திற்கு ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகினர் என அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில் “வெங்கட் பிரபு புத்திசாலித்தனமாக 'மாநாடு' படத்தை எழுதி, இயக்கியுள்ளார். சிலம்பரசன் அசத்தியுள்ளார். எஸ்ஜே சூர்யா மார்வலஸ். யுவனின் இசை படத்தை உயர்த்துகிறது. அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அவர்களது சிறந்ததைக் காட்டியுள்ளார்கள். தமிழ் சினிமாவிற்குப் புதிய அனுபவமாகவும், சிறப்பான பொழுதுபோக்காகவும் உள்ளது,” எனப் பதிவிட்டுளளார்.
ஷங்கரின் பதிவுக்கு இயக்குனர் வெங்கட்பிரபு, சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.




