பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் வசித்து வந்தாலும் சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவர். சென்னையில் தான் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். அதன் பிறகே சினிமாவில் அறிமுகமானார்.
தனது கல்லூரித் தோழிகளுடன் இன்னமும் நட்பில் இருக்கிறார் கீர்த்தி. அவரது தோழி ஒருவருக்கு நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அப்போது கல்லூரித் தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
முன்னணி கதாநாயகியாக உயர்ந்தாலும் தனது கல்லூரித் தோழிகளை மறக்காமல் அவர்களது குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வது ஆச்சரியமான ஒன்று.
“திருமண ஓசைகள், சிரிப்பின் ஒலிகள் நிறைந்த ஒரு சந்தர்ப்பத்தை விட நண்பர்களுடன் சேர வேறு சிறந்த சந்தர்ப்பம் இல்லை,” என தனது தோழியர்களுடனான சந்திப்புப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.