புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் வசித்து வந்தாலும் சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவர். சென்னையில் தான் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். அதன் பிறகே சினிமாவில் அறிமுகமானார்.
தனது கல்லூரித் தோழிகளுடன் இன்னமும் நட்பில் இருக்கிறார் கீர்த்தி. அவரது தோழி ஒருவருக்கு நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அப்போது கல்லூரித் தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
முன்னணி கதாநாயகியாக உயர்ந்தாலும் தனது கல்லூரித் தோழிகளை மறக்காமல் அவர்களது குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வது ஆச்சரியமான ஒன்று.
“திருமண ஓசைகள், சிரிப்பின் ஒலிகள் நிறைந்த ஒரு சந்தர்ப்பத்தை விட நண்பர்களுடன் சேர வேறு சிறந்த சந்தர்ப்பம் இல்லை,” என தனது தோழியர்களுடனான சந்திப்புப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.