ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மேயாத மான் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் குருதியாட்டம் படம் முடிந்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. இதுதவிர ஹாஸ்டல் ருத்ரன், இந்தியன் 2 , 10 தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நாயகி பிரியா பவானி சங்கர் தான். இந்நிலையில் மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யாவின் 24 படங்களை இயக்கிய விக்ரம் குமார் அடுத்து ஒரு வெப் தொடர் இயக்குகிறார். அதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். இதில் நாயகனாக நாகசைதன்யா நடிக்க உள்ளார். விக்ரம் குமார் தற்போது நாகசைதன்யா நடிப்பில் தேங்யூ என்ற படத்தை இயக்கி வருகிறார். அது முடிந்த பின்னர் இந்த வெப் தொடர் தொடங்க உள்ளது.