ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் காதல், கல்யாணம், பிரிவு என பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரே ஜோடி சமந்தா மற்றும் நாக சைதன்யா. சில ஆண்டுகள் காதல், நான்கு வருட திருமண வாழ்க்கை என இருந்தவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் தங்களது பிரிவு பற்றி அறிவித்தனர். அதன்பின் சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார்.
திருமணத்திற்குப் பின்னும் கதாநாயகியாக பிஸியாக இருந்த சமந்தா, தற்போது பாலிவுட் வரை செல்லும் ஆவலில் இருக்கிறார். சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால், அவருக்கு சமந்தா வாழ்த்து சொல்லவில்லை என சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள்.
சமந்தா தற்போது கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். கணவரைப் பிரிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா என பதிலுக்கு கேள்வி எழுப்புபவர்களும் இருக்கிறார்கள்.