தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
காவியத் தலைவன் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் ஜெயில். இதில் ஜி வி பிரகாஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அபர்னதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார்,'பசங்க' பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
2 ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் தள்ளிவைக்கப்பட்ட இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது வெளியிடுகிறது.
படம் பற்றி வசந்தபாலன் கூறியதாவது: அதிகாரத்தின் பெயரால் பூர்வீக வாழிடம் பறிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசும் படமாக உருவாகியிருக்கிறது. எப்போது நீங்கள் குரல் உயர்த்திப் பேசுகிறீர்கள, அப்போது உங்கள் முன்னால் ஒரு ஜெயில் வந்து நின்றுவிடும் . ஜெயில் என்ற தலைப்பு இந்த படத்தில் ஒரு படிமமாக, ஒரு அடையாள குறியீடாக முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. மானுட வளர்ச்சிக்கும், மானுட சமூகத்தின் நலனுக்கும் எவையெல்லாம் இடையூறு ஏற்படுத்துகிறதோ, அவை அனைத்தும் ஜெயில்தான்.
ஜி. வி. பிரகாஷ் குமார், கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒடுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல் தான் கர்ணன். நம்முடைய புராணங்களிலுள்ள கர்ணன், வாழ்நாள் முழுவதும் அங்கீகாரத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் வலியை சுமந்து திரிந்தவன்தான், அந்த பண்பு நலன் இந்தப்படத்தில் ஜிவிக்கும் பொருந்தும். நாடு நாடாக திரிகிறவன் நாடோடி, தான் உருவாக்கிய நகரத்திலேயே வாழ வழியில்லாமல் திரிகிறவன் நகரோடி. ஜெயில் சென்னை நகரோடிகளின் கதை. என்றார்.