கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி |

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் 1970களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த கொள்ளையன் நாகேஸ்வரராவ். எந்த சிறையில் அடைக்கப்ட்டாலும் அங்கிருந்து எளிதாக தப்பி விடுவான். இதனால் அவன் டைகர் நாகேஸ்வரராவ் என்று அழைக்கப்பட்டான். அவன் பிறந்த ஸ்டூவர்ட்புரம் மக்கள் அவனால் நன்மையும் அடைந்தார்கள். துன்பமும் அடைந்தார்கள்.
டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை அதே பெயரில் தெலுங்கில் திரைப்படமாக தயாராகிறது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ரவி தேஜா டைகர் நாகேஸ்வரராவாக நடிக்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். வம்சி இயக்குகிறார். இதே டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை ஸ்டூவர்ட்புரம் டொங்கா என்ற பெயரிலும் தயாராகிறது. இதனை பெல்லம்கொண்டா சுரேஷ் இயக்க, பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கிறார்.
இது ஆந்திர சினிமாவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகேஸ்வர ராவின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அந்த உரையாடல்களின் அடிப்படையில் ஸ்கிரிப்டை எழுதியதாகவும், நாகேஸ்வரராவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாகவும், இதற்காக நான்கு ஆண்டுகள் உழைத்திருப்பதாகவும் வம்சி கூறியுள்ளார். நாகேஸ்வரராவின் வாழ்க்கையை படம் எடுக்கும் உரிமை எங்களிடமே உள்ளது என்று ஸ்டூவர்ட்புரம் டொங்கா படத் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.