மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் 1970களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த கொள்ளையன் நாகேஸ்வரராவ். எந்த சிறையில் அடைக்கப்ட்டாலும் அங்கிருந்து எளிதாக தப்பி விடுவான். இதனால் அவன் டைகர் நாகேஸ்வரராவ் என்று அழைக்கப்பட்டான். அவன் பிறந்த ஸ்டூவர்ட்புரம் மக்கள் அவனால் நன்மையும் அடைந்தார்கள். துன்பமும் அடைந்தார்கள்.
டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை அதே பெயரில் தெலுங்கில் திரைப்படமாக தயாராகிறது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ரவி தேஜா டைகர் நாகேஸ்வரராவாக நடிக்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். வம்சி இயக்குகிறார். இதே டைகர் நாகேஸ்வரராவின் வாழ்க்கை ஸ்டூவர்ட்புரம் டொங்கா என்ற பெயரிலும் தயாராகிறது. இதனை பெல்லம்கொண்டா சுரேஷ் இயக்க, பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கிறார்.
இது ஆந்திர சினிமாவில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகேஸ்வர ராவின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அந்த உரையாடல்களின் அடிப்படையில் ஸ்கிரிப்டை எழுதியதாகவும், நாகேஸ்வரராவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றதாகவும், இதற்காக நான்கு ஆண்டுகள் உழைத்திருப்பதாகவும் வம்சி கூறியுள்ளார். நாகேஸ்வரராவின் வாழ்க்கையை படம் எடுக்கும் உரிமை எங்களிடமே உள்ளது என்று ஸ்டூவர்ட்புரம் டொங்கா படத் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.