'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணத்திற்கு பத்ம விருதுகளில் உயர்ந்த விருதான பத்மவிபூஷன் விருது சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விழாவில் அப்பாவின் சார்பில் மகன் சரண் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சங்கராபரணம் படத்துக்கான முதல் தேசிய விருது முதல் பத்மவிபூஷன் வரை பெரும்பாலான விருதுகளை அரசாங்கத்திடம் இருந்து அப்பா பெற்றிருந்தார். அவர் விருதுகளை வேண்டாம் என்று சொல்லவே இல்லை. அவர் தனது சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொண்டார், எந்தவொரு கலைஞருக்கும், அவர்களை ஊக்கப்படுத்த அங்கீகாரம் தேவை. தேசத்திலேயே மிக உயர்ந்த அங்கீகாரம் ஒன்றைக் காட்டிலும் சிறந்த கவுரவம் என்ன இருக்க முடியும்.
எங்கள் குடும்பத்தினரும், ரசிகர்களும் அப்பாவின் சாதனைகளைப் பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறோமோ, அவ்வளவு துரதிர்ஷ்டவசமாக, அவர் அத்தகைய மரியாதையைப் பெறுவதற்கு முன்பே இறந்தார் என்பதில் கவலையும் கொள்கிறோம். அவரும் அவரது சாதனைகளும் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என்றார்.