75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | 'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' |
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மகன் எஸ்பிபி சரண். பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். திடீரென சமூகவலைதளத்தில் சோனியா அகர்வால் உடன் இணைந்து எடுத்த போட்டோவை பகிர்ந்து இருந்தார். கூடவே ஏதோ புதியது உருவாகிறது என்றும் பதிவிட்டு இருந்தார். இது சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட யூகங்களை வெளிப்படுத்தி வந்தது. குறிப்பாக இருவரும் திருமணம் செய்ய போவதாக நினைத்து பலரும் கமெண்ட்டில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த செய்தி வைரலாக பரவியது.
இதையடுத்து மற்றொரு போட்டோவை சரண் பகிர்ந்தார். அதில் அவருடன் சோனியா, அஞ்சலி, சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அதோடு வெப் சீரிஸ் என்ற ஹேஸ்டேக், பிலிம் புரடக்சன் என்றும் பதிவிட்டார். இதையடுத்தே இவர்கள் இணைந்து எடுத்தது ஒரு வெப்சீரிஸிற்காக என்பது தெரிய வந்தது. ஆனால் அதற்குள் பலரும் திருமணம் அப்படி, இப்படி என வதந்திகளை பரப்பிவிட்டனர்.