26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

புதுடில்லி : டில்லியில் இரண்டாவது நாளாக நடந்த பத்ம விருதுகள் நிகழ்ச்சியில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.,க்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் சரண் பெற்றுக் கொண்டார்.
பல்வேறு துறைகளில் சாதித்த கலைஞர்களுக்கு இந்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும், இன்றும் நடந்தது. டில்லியில் 2வது நாளாக பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (நவ.,9) வழங்கினார். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர் சார்பில் அவரது மகன் சரண் பெற்றுக் கொண்டார்.
![]() |




