ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
2018ல் வெளியான ரஜினிகாந்த் நடித்த 2.O படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர், கமலை வைத்து இந்தியன்-2 படத்தை தொடங்கினார். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்த சில பிரச்சனைகளால் கிட்டத்தட்ட அந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். இதையடுத்து தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை ஆரம்பித்தார் ஷங்கர்.
இந்தியன்-2 படத்தை இடையில் விட்டுவிட்டு இந்த புதிய படத்தை அவர் ஆரம்பிப்பதற்கு சில எதிர்ப்புகள் எழுந்தன. இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து ராம்சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்கினார் ஷங்கர். இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ராம்சரண் - ஷங்கர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.