இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் விஜய் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இயக்கிய தியா படத்தில் நாயகனாக நடித்தவர் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் நாக சவுர்யா. கடந்த வாரம் இவர் நடித்த வருடு காவலேன்னு என்கிற படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் இவரது பண்ணை வீட்டில் சூதாட்டம் ஆடியதாக சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஆந்திராவில் ஒரு பண்ணை வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் அங்கு போலீஸார் சோதனை செய்தபோது சூதாட்ட விளையாட்டுக்களில் சுமார் 25 பேர் பணம் கட்டி ஈடுபட்டிருந்தனராம். அவர்களிடம் இருந்து ரொக்கமாக 25 லட்சம் வரை போலீசார் பறிமுதல் செய்தனராம்.
விசாரணையில் அந்த பண்ணை வீடு நடிகர் நாக சவுர்யாவுடையது என்பது தெரிய வந்துள்ளதாம். அதேசமயம் அது அவரது சொந்த பண்ணை வீடு அல்ல என்றும் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒருவருக்கு சொந்தமான அந்த பண்ணை வீட்டை நாக சவுர்யா லீஸுக்கு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதுவரை இதுகுறித்து நாக சவுர்யா எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.