இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
இயக்குனர் விஜய் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இயக்கிய தியா படத்தில் நாயகனாக நடித்தவர் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் நாக சவுர்யா. கடந்த வாரம் இவர் நடித்த வருடு காவலேன்னு என்கிற படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் இவரது பண்ணை வீட்டில் சூதாட்டம் ஆடியதாக சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஆந்திராவில் ஒரு பண்ணை வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் அங்கு போலீஸார் சோதனை செய்தபோது சூதாட்ட விளையாட்டுக்களில் சுமார் 25 பேர் பணம் கட்டி ஈடுபட்டிருந்தனராம். அவர்களிடம் இருந்து ரொக்கமாக 25 லட்சம் வரை போலீசார் பறிமுதல் செய்தனராம்.
விசாரணையில் அந்த பண்ணை வீடு நடிகர் நாக சவுர்யாவுடையது என்பது தெரிய வந்துள்ளதாம். அதேசமயம் அது அவரது சொந்த பண்ணை வீடு அல்ல என்றும் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒருவருக்கு சொந்தமான அந்த பண்ணை வீட்டை நாக சவுர்யா லீஸுக்கு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதுவரை இதுகுறித்து நாக சவுர்யா எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.