ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த படம் இந்தியன்-2. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இந்தியன்-2வை கிடப்பில் போட்டு விட்டு, ராம்சரணை வைத்து தெலுங்கு படத்தை இயக்க தயாரானார் ஷங்கர்.
ஆனால் அதை எதிர்த்து லைகா நிறுவனம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இரண்டு தரப்பிலும் சமாதானம் ஏற்படாத நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதியை இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காணும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதையடுத்து, நடந்த விசாரணைக்குபிறகு தெலுங்கு படத்தை ஷங்கர் இயக்க தடையில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆனபோதிலும் லைகா நிறுவனம் தொடர்ந்து இந்தியன்-2 படத்தை இயக்கிய பிறகுதான் வேறு படத்தை இயக்க ஷங்கரை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்தியன்-2 வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஷங்கர்-லைகா நிறுவனத்திற்கிடையிலான பிரச்சினையை மீண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி பேசி தீர்த்து வைப்பார் என்று அந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர். அதனால் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெறுவது குறித்து விரைவில் ஒரு நல்ல முடிவு வெளியாகும் என்று தெரிகிறது.




