கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் |

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்(71) நேற்றிரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன மாதிரியான பிரச்னை என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்தது. கடந்த 25ம் தேதி டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கையால் விருது பெற்றுக் கொண்டார் ரஜினி. நேற்று முன்தினம் சென்னை திரும்பிய அவர் தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் அண்ணாத்த படத்தை பார்த்தார். ‛‛அண்ணாத்த படத்தை தன்னை விட தனது பேரன் வேத் மிகவும் ரசித்ததாக ரஜினி நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணி அளவில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார் என, அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
![]() |




