இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்(71) நேற்றிரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன மாதிரியான பிரச்னை என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்தது. கடந்த 25ம் தேதி டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கையால் விருது பெற்றுக் கொண்டார் ரஜினி. நேற்று முன்தினம் சென்னை திரும்பிய அவர் தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் அண்ணாத்த படத்தை பார்த்தார். ‛‛அண்ணாத்த படத்தை தன்னை விட தனது பேரன் வேத் மிகவும் ரசித்ததாக ரஜினி நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணி அளவில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார் என, அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
![]() |