300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கூட்டத்தில் ஒருவன்' இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், நடிகை ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் உருவாகிய உள்ள இப்படம் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் வழக்கறிஞராக ஏன் நடித்தேன் என்பது குறித்து முதன்முறையாக நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார். அதில், இந்த படத்தில் நான் வழக்கறிஞராக நடிப்பதற்கு முன்பு நீதியரசர் சந்துரு ஐயாவை சந்தித்து பேசினேன். ஏற்கனவே அவரை பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கேன். அவர் வழக்கறிஞராக பணியாற்றியபோது, மனித உரிமை தொடர்பாக வழக்குகளில் சம்பளம் பெற்றதில்லையாம். இதுபோன்ற பல விஷயங்களை சேகரித்த பின்னர் அவரை சந்தித்தேன். அப்போது அவர் இளமைக்காலத்தில் எவ்வாறு இருந்தார் என்பதை தெரிந்துக்கொண்டேன்.
நீதித்துறையில் இவர் செய்த விஷயங்களை உலகிற்கு கொண்டு சேர்க்க நாங்கள் நினைத்தோம். நீதிபதி சந்துரு போன்றோர் போற்றுதலுக்கு உரியவர்கள். அவரை போன்ற ஒருவரை யாரும் கண்டுகொள்ளவுமில்லை, உரிய மரியாதையையும் செய்யவில்லை, அதனால் அவரின் கதையை சொல்லி இளம் மனதில் அக்கினிப் பிரவேசம் செய்ய எண்ணினோம். அதன் சாட்சியாகதான் ஜெய் பீம் திரைப்படம் உருவானது. இந்த படத்திற்காக உயர்நீதிமன்ற போன்று மிகப்பெரிய செட் அமைத்தோம். இது தமிழ் திரையுலகில் யாரும் செய்யாத ஒன்று. இவை அனைத்தையும் ஒங்கிணைக்கவே இப்படத்தில் முதல்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தை நான் ஏற்றேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.