பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சிபி ராஜ் கதாநாயகனாகவும் அவரது காதலியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் படம் மாயோன். கோயில் சிலைகள், புரதான சின்னங்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. அதன் பின்னணியில் உருவாகும் படம் இது.
ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கிறார். என்.கிஷோர் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: இப்படத்திற்காக புதுக்கோட்டை அருகில் மாய மலையில், பாதாள அறை, புரதான சிலைகள், புரதான சின்னங்கள் போன்றவை ஆர்ட் டைரக்டரால் வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பத்மநாபபுரம் கோட்டை, மகாபலிபுர சிற்பங்கள், செஞ்சிக்கோட்டை, கீழடி போன்ற கோட்டைகள் ஒவ்வொன்றிலும் பல அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்துள்ளன.
இதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் புதையல் தேடி வருபவர்கள் சந்திக்கும் அதிசயமும், அதிர்ச்சியும் சுவாராஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது. குள்ள மனிதர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், என இப்படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து காட்சிகளும் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைக்கும். புதிய முயற்சியுடன் பல சுவாரஸ்யங்களும் இப்படத்தில் காத்திருக்கின்றன. என்றார்.