இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | 'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் |
சேப்டி ட்ரீம் புரொடக்ஷன், ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன், மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா, சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் சார்பில் என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் தயாரிக்கும் படம் 4 சாரி.
ஜான் விஜய், காளி வெங்கட், ரித்விகா, சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். வெங்கடேஷ் பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், பிரசன்னா சிவராமன் இசை அமைத்திருக்கிறார். சக்திவேல் இயக்கி உள்ளார். நாளை (அக்டோபர் 29) படம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் சக்திவேல் கூறியதாவது: வல்லக்கோட்டை படத்திற்கு பிறகு நான் இயக்கும் படம் இது. இந்தப் படம் சமுதாயத்தில் வாழும் சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் படத்துக்கு 4 சாரி என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது.
படத்தில் நான்கு தனித்தனி கதைகள் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனது தவறை உணர்ந்து சாரி சொல்லும்போது அவனது வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பதை சொல்லும் படம். என்றார்.