கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் | த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ | மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த் | இளயராஜாவை பார்த்து வளர்ந்தவன் நான்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் | 21ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் | ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ஊர்வசிக்கு சம்மன் |
என் ராசாவின் மனசிலே, சோலையம்மா, கரிசக்காட்டு பூவே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. இவரது மூத்த மகன் இயக்குநர் செல்வராகவன், இளையமகன் நடிகர் தனுஷ். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவன் இயக்கிய படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது அவர் தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அண்ணன் செல்வராகவன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான தனுஷ் பின்னர் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஆடுகளம், அசுரன் ஆகியப் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், இரண்டு தேசிய விருதுகளை வென்றார். இந்நிலையில் தற்போது தனது அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் தம்பி தனுஷுடன் இருக்கும் புகைப்படைத்தை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். இந்தப் படம் தற்போது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.